BREAKING NEWS

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

 

 

அவர்கள் வசிக்கும் வீட்டில் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சார்ந்த சிவா என்பவர் நேற்று மதியம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகாத முறையில் செயல்பட்டார் என்று அவரை திருநங்கைகளை பிடித்து அம்பை போலீசில் ஒப்படைத்தனர்.

 

 

பின்பு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்று விட்டதாக தெரிகிறது இதை அறிந்த திருநங்கைகள் சுமார் 8 பேர் அம்பை தாலுகா அலுவலகம் முன்பு திடீர்அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

 

 

பேச்சி டிரஸ்ட்சைல் பணியாற்றும் வெள்ளை துரைச்சி என்ற அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த வெள்ளை துரைச்சி அவருடன் அம்பை உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பேச்சு வார்த்தை நடத்திசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பெரில் கலைந்து சென்றனர்.

 

 

இதனால் அம்பையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS