அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலம்பரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு சுற்றியதாகவும் பள்ளி நிர்வாகத்தினர்.
மாணவர்கள் வகுப்புக்கு வரவில்லை என பெற்றோருக்கு தகவல் அளித்தவுடன் பெற்றோர்கள் மாணவர்களை தேடிய நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களும் திட்டமிட்டு தாங்கள் கடத்தப்பட்டதாக பெற்றோர்களிடமிருந்து தப்பிப்பதற்காக பொய் கூறவே,
ஒன்றுமறியாத வட மாநில சாலையோர போர்வை விற்பனையாளரை பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்றிணைந்து அவர் மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சிறுவர்களின் விளையாட்டுச் செயல் மிகப்பெரிய அளவில் பிரச்சனையை கிளப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து போடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியது.
இன்று மாணவர்கள் மூவரும் பள்ளியை கட்டடித்து பெற்றோர்களிடம் அடி வாங்காமல் தப்பிப்பதற்காக தங்கள் கடத்தப்பட்டதாக வதந்தியை கிளப்பியதன் அடிப்படையில் வடமாநில நபர் தவறுதலாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணையில் மாணவர்கள் பெற்றோர்களிடம் தப்பிப்பதற்காக வதந்தியை கிளப்பியது உறுதி செய்யப்பட்டது.
சமூக வலைதளங்களில் உண்மை தன்மை அறியாமல் வீடியோக்களை வெளியிட வேண்டாம்.
தற்போது நடைபெற்ற சம்பவம் போன்று தவறுதலாக சமூக வலைதளங்களில் பரப்பினால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.