BREAKING NEWS

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சரின் அறிவிப்புக்கு அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு!!!

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சரின் அறிவிப்புக்கு அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு!!!

அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் அ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில். நிர்வாகிகள் ரா.பிரசன்னா, இரா.அருணாச்சலம் கோ.சக்திவேல், சொ.ராஜமாணிக்கம், அ.ஏகலைவன் மற்றும் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும், அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு தொடக்க பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட பல வகுப்புகள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் அரசின் வாய்வழி உத்தரவின் மூலம் திடீரென்று நிறுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றிய பகுதிகளில் கிராமப்புற ஏழை ,எளிய மாணவர்கள் நலனில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் ஒன்றிணைந்து அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் உருவாக்கி அதன்மூலம் அரசு தொடக்கப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஏற்கனவே நடைபெற்றுவந்த எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் வகுப்புகளை மீண்டும் துவக்கி நடத்த வேண்டும், தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும் ,அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கிராமங்களில் பிரச்சாரம் செய்தும் ,தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களும் நடத்திவந்தனர் .

கடந்த 7ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் எல்கேஜி ,யூகேஜி உள்ளிட்ட வகுப்புகள் மூடப்படும், தேவைப்படும். என்றால் அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்ததை கண்டித்து கடந்த 7 ம் தேதி தஞ்சைமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு அமைச்சரின் அறிவிப்பை திரும்ப பெறவும், மீண்டும் அரசு தொடக்க பள்ளிகளில் மழழையர் வகுப்புகள் துவக்கி நடத்தவும் வலியுறுத்தி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் மீண்டும் மழழையர் வகுப்புகள் துவக்கி நடத்தப்படும், தகுதிபெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

 

இந்த அறிவிப்பை அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்கிறது. தமிழ்நாடு முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து தீர்மானமும், இந்த கோரிக்கைகள் வெற்றி பெற துணைநின்ற பெற்றோர் ஆசிரியர் கழகம் ச,மூக ஆர்வலர்கள் ,அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசு தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகளில் அரசும், மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்,அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளிட்ட வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட உட்காரும் இருக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும், கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

மழலையர் வகுப்புகள் நடத்துவதில் ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் என்று அரசு சொல்லி இருக்கின்ற சூழ்நிலையில் உடனடியாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். ஆசிரியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 60 வயதிலிருந்து குறைத்து 58 வயது மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம், ஆசிரியர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது .ஆகவே ஐம்பது வயதை கடந்த ஆசிரியர்களை மருத்துவ பரிசோதனைகளை நடத்தி அவர்கள் பணிபுரிவதற்கு உரிய தகுதியோடு இருக்கின்றாரா என்பதை பரிசோதித்து அதற்கு ஏற்ப முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

தமிழக அரசு ஏற்கனவே செயல்பட்டு வந்த 2381 பள்ளிகளில் மழலையர் பள்ளி செயல்படும் இந்த அறிவித்திருக்கின்றனர். இந்நிகழ்வை மேலும் ஒரு வருவாய் கிராமம் ஒன்றிற்கு ஒரு தொடக்கப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் வருங்காலத்தில் அரசாங்கம் துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் , அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்து கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம், மற்ற அனைத்து அரசு பள்ளிகளிலும் இரவு காவலர் ,அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், துவக்கப் பள்ளிகளில் சிறுவர் விளையாட்டு பொருட்களை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம், அரசு பள்ளிகள் பலவற்றில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த தோட்டக்கலை உள்ளிட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் போதிய ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )