BREAKING NEWS

அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.

அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு  ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.

 

கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மதியழகன் முன்னிலை வகித்தார்.

 

இதில் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.3.29 இலட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

 

இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது, பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிகப்படியான நிதிகள் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில், நாககுடி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மொத்தம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் மேசை நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது.

 

அரசியலில் நாகரீகம் அற்ற போக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் பேசும் தோரணையே தலைகணம் மிக்கதாக தெரிகிறது.

 

கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது செய்தியாளர்களை தரக்குறைவாக இதுவரை எந்த ஒரு கட்சித்தலைவரும் பேசாத வகையில் மிகவும் அநாகரீகமாக பொதுவெளியில் பேசி உள்ளார்.

 

செய்தியாளர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நாகரீகமாக பதில் அளிக்காமல் அநாகரீகமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

 

இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். கூடிய விரைவில் அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் உரிய பதிலடி மக்கள் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ் கே முத்துச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் பாதுஷா மாவட்ட நிர்வாகிகள் ஹிபாயதுல்லா, மைதீன், அப்துல் ரஹ்மான், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )