அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,..
அதிகாலை சூரிய பகவானை வணங்கும் விதத்தில் வீட்டு வாசல் முன்பு வண்ண கோலம் இட்டு புது அடுப்பு புது பானையில் புது நெல்லரிசி பால்இட்டு புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றது.
CATEGORIES தஞ்சாவூர்