BREAKING NEWS

அலங்காநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

அலங்காநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார்.

 

மாவட்ட பார்வையாளர் ராஜகோபால், மாநிலச் செயலாளர் பரத் நாச்சியப்பன், நகர் தலைவர் பால்பாண்டி, முத்துராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்பி பிறந்த நாளையொட்டி வாடிப்பட்டி வட்டாரத்தில் கண் சிகிச்சை முகாம் நடத்துவது,

 

 

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்வது, அழகர்கோவிலில் தங்கத்தேர் இழுப்பது, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டார தலைவர் சடையன் நன்றி கூறினர்.

 

CATEGORIES
TAGS