BREAKING NEWS

அலங்காநல்லூரில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

அலங்காநல்லூரில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஒன்றிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ஜெயச்சந்திரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

ஒன்றிய கவுன்சிலர் ரேவதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசு தொடர்ந்து வாக்களித்த மக்களை வஞ்சித்து வருதாகவும், அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து ஊர்ந்து கொண்டே உள்ளது.

 

மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. எனவே சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ஒன்றிய கழக பொருளாளர் சுந்தரம் ஆகியோர் நன்றி கூறினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )