ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்து இதுகுறித்து
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இரா செங்குட்டுவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த அக்.11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை, அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மறு கூட்டல் தேவைப்படுபவர்களும் ஒளி நகல் தேவைப்படுபவர்களும் அக். 14ஆம் தேதி மாலை 5 மணி வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் உரிய கட்டணத் தொகையுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினை அனுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.