ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுசரிப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு நேற்று ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்ஆர்வி.நாகராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில் கட்சியினர் மௌன ஊர்வலமாக வந்து, ஆண்டிபட்டி வைகை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பேரூர் கழகச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார் .நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வைர முருகன், சேகர், சித்திரன், ஜெயராம் ,சேடப்பட்டி ராஜா, தெப்பம்பட்டி மருது ,எல்ஐசி செல்வம் தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார் உட்பட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்ஆண்டிபட்டிஎம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்