ஆண்டிபட்டி அருகே தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி.

தேனிமாவட்டம் ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் 21 வயது மகன் நவீன் . இவர் இன்று மாலை ராஜகோபாலன் பட்டி
டி.சுப்புலாபுரம் சாலையில் செல்லும்போது சாலையோரம் உள்ள 50 அடி ஆழமுள்ள தனியார் தோட்டக்கிணற்றில் தவறி விழுந்தார்.
இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் ஆண்டிபட்டி காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி பலியான நவீன் உடலை மீட்டனர்.
இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலியான சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.