BREAKING NEWS

ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தலைவர் சக்தி அப்பாசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இருமுடிக்கட்டும் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

 

 

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி,அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,

 

 

அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், முருகன்,கோபி பழனி குமார்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS