BREAKING NEWS

ஆத்தூர் ஊராட்சி கிளை கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

ஆத்தூர் ஊராட்சி கிளை கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகே
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம் அதிமுக மற்றும் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு மேற்கு கிளை கழகம் சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதற்கு முன்பாக பகுதியை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய பொருளாளர் அந்தோணி ராஜ் ஆத்தூர் கிளைக் கழக செயலாளர்கள் சிபி வடிவேல் மணிகண்டன் மற்றும் அக்கரைப்பட்டி கிளை கிழக்கு செயலாளர் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக மாணவர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS