ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது சுயம்பு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை சுயம்பு முத்துமாரி அம்மனுக்கு படையல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை சுயம்பு அருள்மிகு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.காலை கூழ் அமுது படைக்கப்பட்டது.பின்னர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
இந்தப் படையல் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஆன்மிகம்ஆம்பூர்சுயம்பு அருள்மிகு முத்து மாரியம்மன்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்வெங்கடசமுத்திரம் ஊராட்சி