BREAKING NEWS

ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.

ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தனியார் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் அமாவாசை திருநாளில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் இன்று 36-வது மாத அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

முன்னதாக நிகழ்ச்சி திடலில் அலங்கரிங்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அன்னபூரணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து சாப்பாடு,சாம்பார், ரசம் பொறியல், வடை , உள்ளிட்ட இனிப்புடன் கூடிய அறுசுவை உணவை 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அமாவாசை நாளில் வழங்கினார்கள்.

மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS