BREAKING NEWS

ஆலங்காயம் அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது.

ஆலங்காயம் அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது.

அவரிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து போலிசார் விசாரணை.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பறவைகுட்டை பகுதியை சேர்ந்த சின்னராசு(22) என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்காயம் போலீசார் பறவை குட்டை பகுதியில் உள்ள சின்னராசு வீட்டில் சோதனை செய்தனர்.

 

 

அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி கண்டெடுத்து பறிமுதல் செய்த போலீசார் சின்னராசு மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

CATEGORIES
TAGS