இந்து எழுச்சி முன்னணி சார்பாக நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் இன்று இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் கோட்டைச்சாமி தலைமையிலும் நகரதலைவர் செல்வபாண்டி முன்னிலையிலும் நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.
இந்த கோரிக்கை மனுவில் கூறியதாவது தேனி அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளிலும் நாய்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது என்றும் இரவு நேரங்களிலும் பகலிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாய் கடித்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் வெறிநாய்கடித்து சில நேரங்களில் மனித உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது என்றும்,
சாலை ஓரங்களில் நாய்கள் குறுக்கே சென்று இருசக்கர வாகனத்தின் மோதி அன்றாடம் வாகனம் ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருவதாகவும் நோய் வாய்ப்பற்ற நாய்கள் சாலையோரம் சுற்றி திரிவதால் மனித உயிர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றும்,
நாய் பெருக்கத்தினால் சமுதாயத்தின் பல்வேறு இடையூறுகள் மனித உயிர்களுக்கு ஏற்படுகிறது என்றும் எனவே நாய்களை பிடித்து கருத்தடை செய்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வில் இந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர் கோட்டைச்சாமி ஐயப்பன் முத்துராஜ் நகர பொருளாளர் ராஜேஷ்உள்ளிட்ட இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு கோரிக்கை மனுவை வழங்கினர்.