இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..

திருச்சி தெற்கு மாவட்டத்தில், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமையில் இனமான பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், லீலா வேலு, குணசேகரன், பகுதி கழக செயலாளர் மோகன், மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் திரளாக கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சிதிருச்சி மாவட்டம்பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்