BREAKING NEWS

இனிப்பு கடையில், பூனை ஒன்று லட்டுகளை அமர்ந்து உண்ணும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இனிப்பு கடையில், பூனை ஒன்று லட்டுகளை அமர்ந்து உண்ணும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ஓடத்துறை தெருவில் தனியார் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் நேற்று முன்தினம் மாலை பூனை ஒன்று கடைக்குள் சென்ற இனிப்புகளை தின்றுள்ளது.

 

 

இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். மேலும் இனிப்பு வாங்க சென்றவர்கள் இது குறித்து கேட்டபோது கடையின் உரிமையாளர் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில் இனிப்புகளை பூனை அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS