BREAKING NEWS

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஏதோ விஷ கிருமிகள் தீயிட்டு கொளுத்தினர்.

 

 

தீயினை கண்ட பக்கத்துவீட்டு கார்கள் மற்றும் உறவினர்களும் சேர்ந்து தீயை அனைத்தனர். இந்த லோடு ஆட்டோவின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ஆகும்.

 

இதே போல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தியடி வளவு தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் முருகன்(35) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனமும் இதே போல் இரவு நேரத்தில் தீயிட்டு கொளுத்தினர்.

 

 

இந்த வாகனத்தின் மதிப்பு சுமார் அறுபது ஆயிரத்திற்கு மேல் இருக்கும் இப்படி இரவு நேரங்களில் வாகத்தை தீயிட்டும் கொளுத்து ம்மர்ம நபர் யார் என தெரியாமல் ஊர்மக்கள் திகைத்து வருகின்றனர்

 

இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கே மக்கள் பயப்படுகின்றனர்.

 

இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து காவலர்கள் அக்கம்பக்கம் விசாரித்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS