உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை, உணவு பாதுகாப்பு அதிகாரி அனத்து உணவுகளையும் சோதனைக்காக பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஆம்புலென்ஸ் ஓட்டுனர் அசோக் என்பவர் இரவு சாப்பிட வந்துள்ளார் பின்பு அவர் சிக்கன் சில்லி, புரோட்டா, ஆகியவை சாப்பிட்டு தனது வீட்டிக்கும் பார்சல் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.
அதனை சாப்பிட்ட அசோக்கின் தாய், தந்தை, மனைவி. குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கநிலையை அடைந்துள்ளனர் பின்பு உணவகத்திற்கு சென்று அசோக் கேட்டபோது தகத வார்த்தையில் உணவக உரிமையாளர் மற்றும் வேலை செய்பவர்கள் திட்டியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி அனத்து உணவுகளையும் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளார் மேலும் காவல்துறையினர் உணவு சேதனை முடிந்தபின்பு இதற்கு நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்து ஆம்புலென்ஸ் ஓட்டுனர் அசோக்கை சமதானம் செய்து அனுப்பினர்.
உணவக உரிமையாளர் இதுகுறித்து அலட்சியமாக பதிலலித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார் மேலும் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வதை சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அதை மீறி கேட்டால் நான் அரசில் வாதி அதிகாரிகள் எங்கள் கடைகளுக்கு வரமாட்டார்கள் என தெரிவிற்றார்கள் மேலும் மாதமாதம் கடைக்கு கடை பணம் கைமாறி வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிற்கின்றனர்.