BREAKING NEWS

உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.

உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை R.K.R. வீதியில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத முதல் தேதியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜையில் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் மஞ்ச மாதா அம்பாளுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு 108 திருவிழாக்கு பூஜைகள் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் தாலிக்கயிறுமஞ்சள் மாதா முன்னிலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தி பெண்களுக்கு வழங்கினார்கள் மேலும் ஐயப்ப பக்தர்கள் இன்னிசை குழுவுடன் பக்தி பாடல்கள் பாடி பூஜையில் கலந்து கொண்டனர்.

 

 

பின்பு அனைவருக்கும் அபிஷேக பிரசாதங்கள் வழங்கப்பட்டுஅன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )