உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் மு.மத்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி ஆகிய மூவருக்கும் முழு உருவ வெண்கல சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை கொண்டு வந்த நகர்மன்ற உறுப்பினரும், திமுக நகரச் செயலாளருமான செ.வேலுச்சாமி சிலைகளை அமைப்பதற்கான முழு செலவுத் தொகை மற்றும் பராமரிப்பு கட்டணம், கம்பிவேலிகள் அமைத்தல் உட்பட அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
CATEGORIES திருப்பூர்