BREAKING NEWS

உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் திறப்பு விழா -அமைச்சர் பங்கேற்பு !!

உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் திறப்பு விழா -அமைச்சர் பங்கேற்பு !!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யின் முதல் மற்றும் இரண்டாம் நகர மன்றத்தலைவர் ராவ் பகதூர், சையது திவான், அப்துல் ரசாக், மற்றும் கான் பகதூர் ஜனாப், சையது திவான், மொகிதீன், சாகிப் பாட்சா, ஆகியோரால் உடுமலைப்பேட்டை நகராட்சி 1917 முதல் 1928 வரை நகர மன்றத் தலைவர்களாக இருந்து மக்களாட்சி நடைபெற்றது.

 

மேலும், சோழிய கவுண்டர் இறப்பின் போது ஒவ்வொரு பள்ளி வாசலிலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தப்பள்ளிவாசலிலும் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டதாக வரலாற்று நூலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வரலாற்று சிறப்பும் சமூக ஒற்றுமையும் நிறைந்த பாரம்பரிய மிக்க 120 ஆண்டு கால ஜாமி ஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் புதுப்பிக்கபட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.

 

உடுமலைப்பேட்டை யில் 120 ஆண்டுகள் பழமையான ஜாமியா மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டது பெருமை அடைகிறேன். தமிழக முதல்வர் சார்பிலும் எனது தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என பேசினார் இதில் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதி முஸ்லீம் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS