உடுமலை அடுத்த கொங்கல் நகரம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அடுத்த கொங்கல் நகர ஊராட்சி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது.
உடுமலை கோட்டாட்சியர் யஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, நலிந்தோர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும் தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத்துறை ,தாட்கோ, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய தொழிலின் சார்பாக ருபாய் 78,80,252 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறைகள் உள்ள திட்டங்கள் குறித்தும் அதனை பெரும் வழிமுறை குறித்தும் மாவட்ட ஆட்சியர் வினித் அவர்கள் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.
மேலும் பொதுமக்களிடையே மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளாக தெரிவித்தார்.