உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்
![உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-18-at-1.57.04-PM.jpeg)
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த செக்கானோடை வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிகுந்த துர்நாற்றத்துடன் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த பெண்ணின் உடல் அடையாளம் காண முடியாத அளவு அழுகிய நிலையில் இருந்தால் இறந்தவர் யார் என்பது குறித்தும், இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
CATEGORIES திருப்பூர்