உடுமலை அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்துள்ளார்.

உடுமலை அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது’உடுமலையையடுத்த கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் முருகேசன்(வயது 47).விவசாயி.தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
மேலும் சமீப காலங்களாக அடிக்கடி அதிக அளவில் மது அருந்தி விட்டு சரிவர வீட்டுக்கு வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு அதிக மது போதையில் தள்ளாடிய படி வீட்டை விட்டு தோட்டத்துக்கு செல்ல முயன்றுள்ளார்.அவரைத் தடுக்க மனைவி,மகன்,மகள் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அதனை மீறி தள்ளாடியபடி தோட்டத்துக்குச் சென்றுள்ளார்.ஆனால் அதிகாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தனர்.அப்போது முருகேசனின் செருப்பு கிணற்றில் மிதப்பதைக் கண்டனர்.எனவே அவர் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடுமலை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றிலிருந்து முருகேசனின் உடலை மீட்டனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் முருகேசன் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.