BREAKING NEWS

உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு நடைபெற்றது.

உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

 

இந்த இனிய நிகழ்விற்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புரு தலைவர், முனைவர் வை.விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் திரு. வி.கே.சிவக்குமார் வரவேற்புரை பேசினார்.

 

வாழ்த்துரையாக முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ப.செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரு. ஆர்.முருகேசன், திரு.பாலசுப்பிரமணியம் , உபதலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்றஉறுப்பினர் திரு. லிங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

கிருஷ்ணகிரி கூட்டுறவுத்துறையில் பதிவாளராகப் பணியாற்றும் திரு. தமிழரசு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து சிறப்பு செய்தார்.
முன்னாள் பொதுப்பணித்துறை அலுவலர் திரு. ராம்தாஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.

 

சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் திருமதி .புவனேஸ்வரி கருத்துரை பேசினார். மாணவ- மாணவிகள் திருக்குறள் திருவள்ளுவர் குறித்து பாடல்களும் கவிதைகளும் பேசினர். நிகழ்வின் இறுதியாக வரலாற்று ஆய்வு நடுவத்தின் இணைச்செயலாளர் திரு. செ.ராபின் நன்றி உரை கூறினார்.

 

இந்த இனிய நிகழ்வினை திருவள்ளுவர் திருக்கோட்டத்தின்பொறுப்பாளர்கள் திரு. ஞா.பால்கென்னடி, இல.அருட்செல்வன், அருள்கணேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். சிவசக்தி காலனி அரசுஉயர்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS