உடுமலை தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உடுமலை இரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு தொடங்கியது.
கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நடராஜர் சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்க வாசகருக்கு மஞ்சள், திருநீறு, பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் சுவாமி நடராஜருக்கு 108 கலச அபிஷேகம், புஷ்ப அலங்காரம், பஞ்சமுக நடன தீபாராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து, ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஆன்மிகம்