உடுமலை தென்னை வளர்ச்சி வாரியத்தின் கேரள விவசாயிகளுக்கு பயிற்சி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் அமைந்துள்ளது இங்கு குட்டை நெட்டை இடங்களில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் தென்னை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் குறித்தும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

எங்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 19 விவசாயிகள் திருமூர்த்தி நகர் தென்னை வளர்ச்சி மையத்தில் நேற்று பார்வையிட்டனர் அங்கு மேலாளர் ரகோத்தமன் தலைமையில் விவசாயிகளுக்கு நாற்றை தேர்ந்தெடுத்தல் நடவு முறை குறித்து குழி எடுத்தல் உரமிடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தகவலை தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
