உடுமலை நகரில் சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த உடுமலை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், உடுமலை. கல்பனா அரசு மருத்துவமனை ரோடு கபூர்கான் வீதி முக்கிய வீதிகளில் தினந்தோறும் ஆடுகள் சாலை நடுவே நின்றும், படுத்தும் உள்ளதால், இவ்வழியாக வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பலமுறை சம்பந்தப்பட்ட ஆட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால் நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் சாலையின் நடுவே சுற்றி திரியும் ஆடுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசாமி நகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

CATEGORIES திருப்பூர்
