உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் மின் விளக்குகள் எரிவதில்லை.

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் மின் விளக்குகள் எரியாததால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரயில்வே ஸ்டேஷன், பிளாட் பார்ம், 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.
இதனால், ரயில் பயணியர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் பெண்கள், குழந்தைகள், இருட்டாக உள்ளதால், ஒரு வித அச்சத்துடன் வெளியில் வர வேண்டியுள்ளது. அதே போல், ரயில்வே பிளாட் பார்ம்களில், பல்வேறு வேடமணிந்து சமூக விரோதிகள், வயதானவர்களையும், பெண்களையும் மிரட்டி பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.எனவே, ரயில்வே ஸ்டேஷனில் மின் விளக்குகள் எரியவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் ரயில்வே துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.