உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவி ஜி கல்லூரி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கல்லூரி ஆலோசகர் மற்றும் இயக்குநர் முனைவர் ஜெ. மஞ்சுளா மற்றும் முதல்வர் முனைவர் ந. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினர். தமிழர் திருநாளைப் போற்றும் வகையில் மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து, குலவை இட்டு சூரியப் பொங்கலை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. உறியடி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், தலையில் தண்ணீர் குடம் வைத்து நடத்தல் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இதோடு, பாரம்பரியமாக நடத்தப்படும் ஒயிலாட்டம், வள்ளிக்கும்மி தேவராட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளும் நிகழ்த்தப்பட்டது. நிறைவாக கண்களை கவரும் வகையில் மாணவியரின் நடனமும் நடைபெற்றது.
அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. சூரியனுக்கும் கோமாதாவிற்கும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனைகளை கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை இணைப்பேராசிரியருமான திருமதி டி.வி. பானுமதி அவர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் வழங்கினர்.
மற்றும் கல்லூரிப் பேரவை மாணவத் தலைவி செல்வி எம்.ஹர்ஷினி மற்றும் செயலர் சுஷ்மா மற்றும் துணைச் செயலர் யோகராணி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.