BREAKING NEWS

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் கடங்கனேரி கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில்,..

 

 

இரண்டாம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு உரையாற்றினார் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன்.

 

 

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி தென்காசி ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் செயலாளர் சிவஅருணன், வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புசகோதரர்.குகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி. முருகேஷ்வரிபாலகுமார்,

 

 

கடங்கனேரி கிராமத்தை சார்ந்த அண்ணன் ஐய்யம்பெருமாள் உட்பட கடங்கனேரி பிரண்ட்ஸ் கிளப் குழுவினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும். வீராங்கனைகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுக்கோப்பையும், ஊக்கத்தொகையும் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS