BREAKING NEWS

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் பரிசு.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் பரிசு.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டி வழங்கப்பட்டது.

 

திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கடந்த 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு அதில் ரத்த தானங்கள் அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு திமுக கட்சியினர் வழங்கி வந்தனர்.

 

 

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த 10 குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல்மாவட்ட துணை அமைப்பாளர் முனைவர் ராஜசேகர் ஏற்பாட்டில் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் அவர்கள் 10 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெட்டிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கினார்.

 

 

இதில் ஆத்தூர் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் செழியன், உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )