BREAKING NEWS

உப்புக்கோட்டையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா.

உப்புக்கோட்டையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா.

தேனி அருகே உப்பு கோட்டை கிராமத்தில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சமுதாய நலக்கூடம் கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தை இன்று காலை போடி வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க ஜேசிபி எந்திரத்துடன் வந்தனர்.

 

அப்போது இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தற்போது இது குறித்து வருவாய்த்துறையினர் காவல் துறையினர் அந்த சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS