உரிமைகுரல் தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிமை குரல் தொழிற்சங்கத்தின் சிஐடியு ஆட்டோ சாலைப்போக்குவரத்து தொழிற்சங்க ஆகியோர் முன்னிலை ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆன்லைன்,
ஸ்பார்ட் உள்ளிட்ட அபராதங்களை நிறுத்தக்கோரியும் ஆர்டிஓ அலுவலகத்தை தனியாரிடம் ஒப்படைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி புகை சான்று நிறுவனம் உள்ளிட்ட சிறு குரு பட்டறைகளை மூட வழிவகை செய்யக்கூடாது பெட்ரோல் கேஸ் டீசல் மீதான கொடூர வரிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், நல வாரியத்தில் உள்ள குளறுபடியை சரி செய்து வலியுறுத்தியும்,
உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.