BREAKING NEWS

உஷார்!! 484 பேரிடம் ரூ 7 கோடி பிட்காயின் மோசடி !! போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!!

உஷார்!! 484 பேரிடம் ரூ 7 கோடி பிட்காயின் மோசடி !! போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!!

மதுரையில் 484 நபர்களிடம் பிட்காயின் மோசடியில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்தியாவில் பிட்காயின் மோசடி என்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதிலும் தமிழகத்தில் அதிகமாக பிட்காயின் மோசடிகள் அரங்கேறி வருவதால் இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர்களிடம் சென்னையைச் சேர்ந்த இருதயராஜ் தலைமையிலான கும்பல் மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதில் சென்னையை சேர்ந்த 4 பேர் இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிட்காயின் மூலம் 6 மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக வாக்குறுதி அளித்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனிடையே மோசடியில் ஈடுப்பட்டுள்ள நபர்களை கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )