ஊரக இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க வலியுறுத்தி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஊரக இணைப்பு சாலையை,.
விரைந்து அமைக்க வலியுறுத்தி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு செய்து சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்சாலை பணிசேப்பாக்கம் கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நல்லூர் ஒன்றியம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை