BREAKING NEWS

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

 

இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் நடந்தது முகாமில் குத்தாலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்துள்ள ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்.

 

20 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு 512 பேரிடம் நேர்காணல் நடத்தினர் அதில் 110 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.  இம்முகாமில் மகளிர் திட்ட அலுவலர்கள் குணசேகர்,மனுநீதிசோழன்வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS