BREAKING NEWS

எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.

எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், மற்றும் அவருடைய மகள் இருவரும் 12.30 மணி அளவில் தாவந்தெரு நகராட்சி துவக்க பள்ளியில் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக ஸ்கூட்டியில் சென்றுள்ளனர்.

 

 

அப்போது, பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் தாவந்தெரு காளியம்மன் கோவில் எதிரே இருக்கும் வேகத்தடையில் மெதுவாக செல்லும்போது நாகம்மாள் கழுத்தில் இருந்த 5 1/2 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து, தாயின் தாலி செயினை பறித்துச் சென்ற இரண்டு இளைஞர்களையும் நாகம்மாளின் மகள் பின் தொடர்ந்து பேருந்து நிலையம் வரை துரத்திச் சென்றுள்ளார். பின்பு பேருந்து நிலையம் சென்றவுடன் இரண்டு இளைஞர்களும் மாயமாக மறைந்து விட்டனர்.

 

 

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை தேடி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )