எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டி கேரளா’ என்று அழைக்கப்படும் பூலாம்பட்டி ஆற்றில் அப்பகுதி மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தை கண்டுள்ளனர். இதையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சம்பவ விரைந்து சென்ற போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மூதாட்டியின் இறப்பு குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES சேலம்
TAGS அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம்எடப்பாடி அரசு மருத்துவமனைகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பூலாம்பட்டி காவல் நிலையம்