BREAKING NEWS

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், சிலை திறப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பாட்டில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட்டில் 10 அடி பீடமும், 8 அடி உயரமும், 13 பொன்மொழிகள் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான தோரண வாயில்கள் அமைக்கப்பட்டது.
கலைஞரின் திரு உருவ சிலையை தமிழக முதல்வர் முக .ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், எம்.பி கனிமொழி,
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

சிலை அமைக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் இனிக்கோ இருதயராஜ், அப்துல் சமது, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன்,பகுதி செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு இ.எம் தர்மராஜ் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், kkk கார்த்திக், கொட்டப்பட்டு ரமேஷ், முருகானந்தம்,
ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில் திரளான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கையில் கொடிகளை ஏந்தியும், பலன்களை பறக்க விட்டும் கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS