BREAKING NEWS

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர்

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர்

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி நினைவஞ்சலி செலுத்தினர்.

 

 

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களில் வழிகாட்டுதல்படி,

 

 

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் கட்சியினர் நல்லூர் வடக்கு ஒன்றியம் ஆதியூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆரின் ஆளூயர திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

பின்னர் வேப்பூர் கூட் ரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேப்பூர் செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

மேலும் இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்க ஜெய்சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் புகழேந்தி, மாவட்ட பாசறை செயலாளர் கென்னடி, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கே பி கொளஞ்சி, அமைப்புச் செயலாளர் புகழேந்தி,

 

 

வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கஞ்சமலை, ஒன்றிய இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் நல்லூர் ரவிச்சந்திரன், சின்னசாமி,

 

ஒன்றிய துணைச் செயலாளர் சுப்ரமணியன் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ரமேஷ், மணி, நீலகண்டன், கீழக்குறிச்சி தங்கவேல், மற்றும் கழக நிர்வாகிகள் கலியமூர்த்தி, சித்தூர் காசி, ராஜபாண்டியன், பெரியசாமி, வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS