எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு.

கும்பகோணத்தில் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ராமலிங்கம்.எம். பி.துணை மேயர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் அசோக் குமார் பாஸ்கர் கூகுர் அம்பிகாபதி தாமரைச்செல்வன் இலக்கிய அணி அமைப்பாளர் ஆடுதுறை உத்திராபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணை பொதுச்செயலாளர் ராசா கலந்து கொண்டு பேசுகையில்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். இந்தியாவில் எங்கும் கிடைக்காத இட ஒதுக்கீடு பெற்றது தான் திராவிட மாடல், இந்திய அரசியல் சட்டத்தின் இறையாண்மையின் மீது பதவிப்பிரமாணம் செய்து விட்டு மக்களவையில் ஜெய்ஸ்ரீராம் என முழங்குவது தான் ஆரிய மாடல்
திராவிட மாடலில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை, மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகம், திருநங்கைகளுக்கு
சமூக பாதுகாப்பு வழங்கியது தான் திராவிட மாடல்.
கொரானா பொது முடக்க காலங்களில் தமிழக மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது, பெண்களுக்கு இலவச மகளிர் பேருந்து, வருகின்ற காலங்களில் பெண்களுக்கு ரூ. ஆயிரம் உரிமைத் தொகை வழங்குதல், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். வரும் காலங்களில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு செய்வார். ஆனால் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஓராண்டு கால ஆட்சி சவால் நிறைந்தது, தீவிரமான கொரானா காலங்களில் கவச உடை அணிந்து நோயாளிகளுக்கு அரணாக இருந்தார் தமிழக மக்களை பாதுகாப்பு அரணாக இருந்து
கொரானாவை கட்டுப்படுத்தினார்.
இந்தியாவை ஆட்சி செய்கின்ற பிரதமர் மோடி கொரானா காலங்களில் வெளியே தலைகாட்ட முடியவில்லை. தேசபக்த அரசு என்று கூறும் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்பினர்கள்
1925 ஆண்டுக்கு பிறகு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் ஒருவர் கூட இல்லை. சாவர்க்கர் காங்கிரசில் இருந்தார் ஆனால் சிறையில் இருக்கும்போது ஆறுமுறை மன்னிப்பு கடிதம் எழுதிய வீர சவார்க்கர்,கோழை சவார்க்கர் என்பது மட்டும்தான். இந்திய இறையாண்மையை
கொச்சைப்படுத்தும்
தேசபக்தி உள்ளவர்களுக்கு திமுக இருக்கும் வரை எந்த ஒரு வெற்று
பிரச்சாரமும் எடுபடாது என தெரிவித்தார்.