எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

களக்காடு நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் வரவேற்புரையாற்றினார்.
வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல் முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
களக்காடு புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்குன்டான குறிப்பானையின் முழு விவரத்தையும் நகராட்சி மண்டல இயக்குனர் பரிந்துரையை களக்காடு நகராட்சி ஆணையரிடம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தின் வயிலாக கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப்பைஜி, கபீர், ஜமீன், ஆதம், ராம்நாடு பீர்முகம்மது, ஆகியோர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் நகர செயலாளர் காஜா நன்றியுரையாற்றினர்.