BREAKING NEWS

ஐஸ்வர்யா இன்ஜினியரிங் காலேஜ் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

ஐஸ்வர்யா இன்ஜினியரிங் காலேஜ் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

 

ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பருவாச்சி, இரட்டைக் கரடு பகுதியில் ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகிறது.

 

இந்த கல்லூரி வளாகத்தில் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் தலைவர் சேகர் தலைமையிலும், கல்லூரி செயலாளர் நிர்மலா தேவி முன்னிலையில் நடைபெற்றது.

 

இதில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு சிக்க நாயக்கன் காலேஜ் உதவி பேராசிரியர் கிருஷ்ணா கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டம் பெற்ற கையுடன் அரசு மற்றும் தனியார் துறைக்கு பணிக்கு செல்வது பற்றியும் அவ்வாறு பணி கிடைக்காத பட்சத்தில் மனசோர்வு அடையாமல் சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறுவது பற்றியும் விளக்கி பேசினார்.

 

பின்னர் கல்லூரியில் பயின்ற 150 மாணவ மாணவியர்களுக்கு வட்டங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா இன்ஜினியரிங் கல்லூரி பிரின்ஸ்பால் கோவிந்தசாமி மற்றும் ECE, EEE, MECHANICAL, CS போன்ற பாடப்பிரிவுகளின் HOD மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )