BREAKING NEWS

ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆடு, மாடுகளுடன் சென்ற கிராம மக்கள்..

ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆடு, மாடுகளுடன் சென்ற கிராம மக்கள்..

ஒசூர் ஆட்சியார் அலுவலகத்தில் குடியேற ஆடு, மாடு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஒசூர்  ஆட்சியாளர் அலுவலகத்தில் குடியேற ஆடு, மாடு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் 6 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளிலிருந்து எம்.சாண்ட்,  ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் கொரட்டகிரி கிராமத்துக்குள் செல்வதால் சாலைகள் பழுதடைந்து., கிராமம் மாசடைவதாக அக்கிராம மக்கள் லாரிகள் செல்ல எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

இதைத் தொடர்ந்து, கொரட்டகிரி கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் துணி, பாத்திரங்கள், ஆடு, மாடுகளுடன் கிராமத்தை காலி செய்து ஒசூர் ஆட்சியாளர் அலுவலகத்தில் குடியேற புறப்பட்டனர்.

 

கொரட்டகிரி கிராமத்திலிருந்து ஒசூர்  ஆட்சியாளர் அலுவலகத்துக்கு 21 கி.மீ. தொலைவு நடைப்பயணமாக சென்ற பொதுமக்களை போலீஸார் தடுத்தும் கொட்டும் மழையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

 

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர்.

 

2 நாள்களில் ஒசூர் ஆட்சியாளர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என வட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )