கடலூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக இளைஞர் அணியினர் உற்சாகமாக கொண்டாட்டினர்.

கடலூர்,
திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள்,
ஆதியூர் ஊராட்சியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா போன்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவகி ராஜா, மாவட்ட கவுன்சிலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நகர் சி சக்தி விநாயகம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சச்சின். ரகுநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஏழுமலை, வீரமுத்து.
முன்னாள் கவுன்சிலர் வேப்பூர் சோலை ராஜன், மாளிகை மேடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், காட்டுமயிலூர் கிளைச் செயலாளர் அன்பு நிதி, ப.கொத்தனூர் கிளை செயலாளர் செந்தில், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக ஆதியூர் கிளை இளைஞரணி அமைப்பார் சூரியா அனைவருக்கும் நன்றி கூறினார்.