கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏ. குச்சிபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த 4 சிறுமிகள் உள்ளிட்ட ஏழு இளம்பெண்கள் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்; அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Uncategorized