BREAKING NEWS

கடலூர் அருகே தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 

கடலூர் அருகே தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் நல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் பாலுபிள்ளை, சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

 

மேலும், பிரச்சாரப் பிரிவு திருமுருகன், ராஜேந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர்கள் வெங்கடேசன், ரஜினி, ஒனஒன்றி செயலாளர்கள் மரூர் சிவா, சுசிகுமார், ராமதாஸ், சாமிதுரை, மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் நகர் பாலு, மாளிகை ஆறுமுகம், ராமசாமி மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )